இதுதான் பிஜேபி! வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி கைது

1 Min Read

திருவள்ளூர், மார்ச் 15- திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம்., மய்யத்தில் உள்ள இயந்திரத்தை, வங்கி உதவி மேலாளர் பிரதீப் மேற்பார்வையில் பொறியாளர் ‘சர்வீஸ்’ செய்து கொண்டிருந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவரும், பா.ஜ.க, மாநில இளைஞரணி செயற் குழு உறுப்பினருமான அபிலாஷ் (வயது 35) என்பவர், பணம் எடுக்கச் சென்றபோது அங்கு பணியில் பிரதீப் அவரை தடுத்தார். இப்போது பணம் எடுத்தால், இயந்திரத்தில் கோளாறு ஏற்படும் என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அபிலாஷ், பிரதீப்பை அநாகரிகமாக பேசி, காலணியால் அடித்து தாக் கினார்.
இதுகுறித்து பிரதீப் புகாரின்படி வழக்குப் பதிந்த மணவாள நகர் காவல்துறையினர், அபிலாஷை கைது செய்தனர். திருவள்ளூர் ஜே.எம்., – 2 நீதிபதி பவித்ரா முன் நேற்று ஆஜர்படுத்தி, சொந்த பிணையில் அவர் விடுவிக்கப் பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *