வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 150ஆவது திருவள்ளுவர் சிலையை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் டாக்டர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம், சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் வி.ஜி.பி. ராஜாதாஸ் மற்றும் பலர் உடன் உள்ளனர்.