புதுடில்லி, மார்ச் 14 தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென பதவி விலகியதாலும், ஏற்கெனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையிலும், ஒன்றிய அரசு புதிய தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்க மோடி தலைமையில் இன்று (14.3.2024) கூட்டம் கூட்டியது. அதில் கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ்குமார் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த எஸ்.எஸ்.சாந்து தேர்தல் ஆணையர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.