மக்களவைத் தேர்தல்: சி.பி.அய்.க்கு திருப்பூர், நாகை சி.பி.எம்.க்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு

1 Min Read

சென்னை, மார்ச் 13- மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இதற் கான ஒப்பந்தம் கையெ ழுத்தானது.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப் பூர் தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

தொகுதிப் பங்கீடு இறுதியானது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக் கையில், ”நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்த லில், திராவிட முன்னேற் றக் கழகமும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட் சிகளும் இணைந்து போட் டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப் பந்தத்தின் தொடர்ச்சி யாக நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தீர்மானிக்கப் பட்டது.
தொகுதிகளின் விவரம்: 1.மதுரை 2. திண் டுக்கல்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் – சி.பி.அய். மாநிலச் செய லாளார் இரா.முத்தரசன் இது குறித்து செய்தியா ளர்கள் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன், “தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது.

கடந்த முறை மதுரை, கோவையில் போட்டியிட்டோம். இந்த முறை மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாங்கள் கோவையை விட்டுக்கொடுத்தோம், திமுகவினர் திண்டுக் கல்லை விட்டுக் கொடுத் துள்ளனர்.

தேர்தலுக்கு முன் னால் சிஏஏவை அமல் படுத்தி ஒன்றிய பா.ஜ.க. மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *