தமிழ்நாட்டுக்கு புதிய தேர்தல் ஆணையர் நியமனம்

1 Min Read

சென்னை, மார்ச் 12- வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலராக இருந்த பா.ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல் ஆணை யராக நியமிக்கப்பட்டுள் ளார்.
சமீபத்தில் மாநில தேர் தல் ஆணையரின் பதவிக் காலத்தை பதவி யேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல் லது 65 வயது வரை என்று தமிழ் நாடு அரசு உயர்த்தி யது. இந்த சூழலில், ஏற்கெ னவே மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிக்குமார் கடந்த மார்ச் 9-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
மாநில தேர்தல் ஆணை யர் பதவி காலியாக இருந்த நிலையில், அப்பதவியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலராக உள்ள பா.ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறி விக்கை நேற்று (11.3.2024) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பா.ஜோதி நிர் மலாசாமியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யராக ஆளுநர் நியமித் துள்ளார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து 5 ஆண் டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள் ளது.
தற்போது மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதி நிர்மலாசாமி வரும் மே மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்நிலை யில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *