புதுச்சேரி சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை – கொலைக்கு கண்டனம்!

1 Min Read

புதுச்சேரியில் 9 வயது சிறுமி காலிகள் இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, கொலையும் செய்யப்பட்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பிஜேபி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக இருப்பவரும் ஒரு பெண்மணிதான்.
இதே செயல் பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் நடந்திருந்தால் இந்தப் பிஜேபி வகையறாக்கள் என்ன குதி குதித்திருப்பார்கள்.
பெண்களுக்காக வக்காலத்து வாங்கி பிரதமர் மோடி வங்காளத்தில் முழக்கமிட்டுள்ளார்.

‘பெண்களே மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவார்கள்’ என்று வீராவேசம் பேசியுள்ளார்.
புதுச்சேரியில் இவர்கள் ஆட்சியில்தானே – இந்தக் கொடூரம் நடந்திருக்கிறது..
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

சம்பந்தப்பட்ட கொடுமையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜம்மு – காஷ்மீரில் கத்துவாவில் எட்டு வயது ஆசிஃபா என்ற பெண்ணை கோயில் கருவறையில் பத்து நாள்கள் வைத்து கோயில் அர்ச்சகர் உட்பட எட்டுப் பேர், பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக் கொலை செய்ததையும் இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டும்.

பிஜேபி ஆட்சியின் இலட்சணம் இதுதான் – மக்கள் தெரிந்து கொள்ளட்டும். வரும் தேர்தலில் பாடம் கற்பிக்கட்டும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
7.3.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *