பிரதமரின் தமிழ்நாட்டு வருகையால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

viduthalai
1 Min Read

நாகர்கோவில், மார்ச்.6- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று (5.3.2024) அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் வசந்தகுமார் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை, நூறு ஆண்டுகள் கண்டிராத பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம் மக்களை பார்க்க பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் இப்போது வாக்கு சேகரிக்க வருகிறார். அவர் மக்களை ஏமாற்றுவதற்குதான் தொடர்ந்து தமிழ்நாடு வருகிறார். இதனை தமிழ்நாடு மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒருபோ தும் பிரதமர் மோடியின் சித்து விளையாட்டுகள் எடுபடாது. மோடி குடும்பம் என்றால் ஒரே குடும்பம் அதானி குழுமம்தான்.

வெள்ள நிவாரணத்தின்போது மக்களுக்கு தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை என்று மோடி கூறி உள்ளார். அப்படியானால் பேரிடர் காலத்தில் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தது யார்?. பா.ஜனதா அரசு தான் எதையும் செய்ய வில்லை. பா.ஜனதா தலைவர்கள் சிலர் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்ததால் தமிழ்நாட்டு தலை வர்களுக்கு அச்சம் ஏற்படுவதாக தெரிவித்துள் ளனர். ஆமாம், எங்களுக்கு அச்சமாகத் தான் இருக்கிறது. எல்லா மாநிலத்தையும் அழித் தாகி விட்டது. தமிழ்நாடுதான் சமூகநீதியில், சமத்துவ நீதியில், எல்லா நீதியிலும் மேலோங்கி உள் ளது. இதையும் அழிப்பதற்கு பொய் பித்த லாட்டம் பண்ண வந்துவிடுவார் என்ற அச்சம் எல்லோருக் கும் இருக்கிறது. அந்த பித்தலாட்டம் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *