முதல் கோணல்: மேற்கு வங்கத்தில் பிஜேபி வேட்பாளர் பவன் சிங் விலகல்

viduthalai
1 Min Read

கொல்கத்தா, மார்ச் 4- மேற்கு வங்க மாநிலம் அசான் சோல் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி பாடகர் பவன் சிங், சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்ததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

மக்களவை தேர்தலுக் கான முதல்கட்ட வேட் பாளர் பட்டியலை பாஜக கடந்த 2ஆ-ம் தேதி வெளியிட்டது. இதில், 195 வேட்பாளர்களின் பெயர் கள் இடம்பெற்றன. இதில், மேற்கு வங்க மாநி லம் அசான்சோல் தொகு தியில் பிரபல போஜ்புரி பாடகர் பவன் சிங் (38) போட்டியிடுவதாக அறி விக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, சமூக ஊடகங் களில் இவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். பவன் சிங் பாடிய பல திரைப்பட பாடல்கள், வங்காள பெண்களை கிண்டல் செய்தும், இழிவுபடுத்தி யும் பாடுபடுவதுபோல இருப்பதாக விமர்சனம் செய்தனர். பவன் சிங் குக்கு இது தர்மசங்க டத்தை ஏற்படுத்தியது.
தவிர, மேற்கு வங்கத் தின் சந்தேஷ்காலி தொகு தியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத் தில் திரிணமூல் கட்சியை பாஜக விமர்சித்து வரும் நிலையில், பவன் சிங்கை வேட்பாளராக நிறுத்து வதை பாஜக தலைமையும் விரும்பவில்லை. இதை யடுத்து, போட்டியிலிருந்து விலகுமாறு பவன் சிங்கை பாஜக அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, எக்ஸ்தளத்தில் பவன் சிங் வெளியிட்டபதிவில், ‘என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்த பாஜக தலை மைக்கு நன்றி. சில கார ணங்களால், அசான் சோல் தொகுதியில் என் னால் போட்டியிட முடி யாது’ என தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்க மக்களின் உறுதியான நிலைப்பாட் டால் அவர் விலகிவிட்ட தாக திரிணமூல் பொதுச் செயலாளர் அபிஷேக் தெரிவித்துள்ளார்.முதல் கோணல்: மேற்கு வங்கத்தில்
பிஜேபி வேட்பாளர் பவன் சிங் விலகல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *