பெரியார் மணியம்மை அறிவியல் – தொழில்நுட்ப நிறுவனத்தில் “நெகிழி மாசுபாட்டிற்கு தீர்வு” – விழிப்புணர்வு நிகழ்வு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

வல்லம், அக். 1- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறையின் சார் பாக சுற்றுச்சூழல் பாது காப்பு குழு, மருதுபாண் டியர் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வனத் துறையுடன் இணைந்து “”நெகிழி மாசு பாட்டிற்கான தீர்வு”” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் சமூகப் பணித்துறை முதலா மாண்டு மாணவர் ச.வீர மணி வரவேற்புரை ஆற் றினார். மருது பாண்டியர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.விஜயா தலைமையுரை ஆற்றினார். அவர் தமது உரையில் “”நெகிழி மாசு பாட்டிற்கான தீர்வு”” குறித்த விழிப்புணர்வு செயல்பாடுகளை எளிய முறையில் உரையாற்றினார். முனைவர் ஞானராஜ் உதவிப் பேராசிரியர் சமூகப்பணித் துறையின் செயல்பாடுகள் மற்றும் சமூகப் பணித்துறை மாணவ, மாணவரின் களப் பணி குறித்தும் விளக்கமளித் தார்.

தஞ்சாவூர் மாவட்ட வனத்துறை வனவர் அதி காரி டி.இளஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், 

நெகிழி பயன் பாட்டை எப்படி தவிர்க்க வேண்டும் என் றும், நெகிழிக்கான மாற் றுப் பொருள் என்ன  என்பது குறித்தும், நெகிழி கழிவுப் பொருள்களை எவ் வாறு மறுசுழற்சி செய்வது போன்ற அறிவுரைகளை வழங்கினார். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 80 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வு முதலாமாண்டு சமூகப் பணி துறையின் சுற்று சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைத்தனர்.  

இறுதியாக த.வைஷ் ணவி முதலாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவி நன்றியுரை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *