உலகத் தாய்மொழி நாள் சிறப்புக் கூட்டம்

1 Min Read

சென்னை, பிப். 27- பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 409ஆவது வார நிகழ்வாக சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் உலக தாய்மொழி (21.2.2024) நாளையொட்டி 25.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பா ளர் இரா.கோபால் அழைப்பில் மேனாள் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சு.சிவ குமார் முன்னிலையில் செயலாளர் க.இளவரசன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
சிறப்புக் கூட்டத்தில் மேனாள் நகர மன்ற உறுப்பினர் தேவேந்திர குமார் தாய் மொழியின் சிறப்பு குறித்து உரை யாற்றினார்.
நிகழ்வில் கருப்பசாமி, ஆறுமுகம், சுமதி மணி, ஹரிதாஸ், கெஜலட்சுமி, பிச்சை மணி, இதயநிலா, காமாட்சி, உதயசூரியா, சக்தி தாசன், தமிழ் மதி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் பிஞ்சு பூம்பொழிலின் ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங் கினார்.
இறுதியில் வழக்குரை ஞர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார் ‌.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *