வழக்குரைஞர் சிகரம் செந்தில்நாதன் “குடியரசுத் தலைவர், ஆளுநர் – அதிகாரங்கள்” எனும் தலைப்பில், தான் எழுதிய புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி, நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சிகரம் செந்தில்நாதன், வி.சுந்தரமூர்த்தி இருவரும், கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவுக்காக தொகுத்த 32 கட்டுரைகள் அடங்கிய, “கவிஞர் தமிழ் ஒளி படைப்பாக்கம்” எனும் புத்தகத்தை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (பெரியார் திடல், 2.10.2023)
– – – – –
வ.ம. வேலவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு அரையாண்டு விடுதலை சந்தா தொகையான 1000 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (1-10-2023, பெரியார் திடல்)