ஒன்றிய பிஜேபி அரசு இரட்டை என்ஜின் ஆட்சியாம் வேலையில்லா இளைஞர்களுக்கு இரட்டை அடி என்று இதற்குப் பொருளா?

1 Min Read

ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடில்லி,பிப்.19- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணம் உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரு கிறது. இந்த பயணத்தில் மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்து வரும் வேலையில்லா திண்டாட் டத்தை அவர் கையிலெடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒன்றிய _- உத்தரப்பிரதேச மாநில அரசுகளை அவர் கடுமையாக குறைகூறி உள் ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப் பதாவது:-
உத்தரப்பிரதேசத்தில் இன்று 3-இல் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் என்னும் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். மாநிலத்தில் ஒன் றரை லட்சத்துக்கு அதிகமான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறைந்த கல்வித்தகுதி கொண்ட பணிகளுக்கும் பட்ட தாரிகள், முதுகலை பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட வரிசையில் நிற்கிறார்கள்.
வேலையில்லாத இளைஞர் களுக்கு இரட்டை அரசு என்ஜின் என்றால் இரட்டை அடி என்று தான் பொருள். முதலில், ஆட் சேர்ப்பு அறிவிப்புகள் வெளி வருவதே கனவாகவே இருக்கிறது, ஆட்சேர்ப்பு அறிவித்தால், வினாத் தாள் கசிந்துவிடும். தேர்வு நடந்தால் அதன் முடிவு தெரியாது. நீண்ட நாட்கள் காத்திருந்து முடிவு வந் தாலும், வேலையில் இணைவதை உறுதி செய்ய அடிக்கடி நீதிமன்றம் செல்ல வேண்டும்.
பல ஆண்டுகள் காத்திருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைக்கான வயது வரம்பை கடந்து விட்டனர். ராணுவம் முதல் ரயில்வே வரை, கல்வித்துறை முதல் காவல்துறை வரை இதுதான் நிலைமை. வேலை என்பது ஒரு மாணவருக்கு வருவாய் ஆதாரம் மட்டுமல்ல, தனது குடும்பத்தின் வாழ்க்கை மாற்றத்துக்கான கனவும் ஆகும். இந்த கனவு சிதைவதால் ஒட்டுமொத்த குடும்பமும் நலி வடைந்து விடுகிறது.
இளைஞர்களின் கனவுகளுக்கு நியாயம் சேர்ப்பதே காங்கிரசின் கொள்கைகள் ஆகும். அவர்களின் தவத்தை வீணாக விடமாட்டோம்.-இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *