திருச்சி, அக். 6 – போபால் நகரிலுள்ள RB Science Enterprising Bioscience Research என்ற அமைப்பு பெரியார் மருந் தியல் கல்லூரியின் மருந்தாக்கவி யல் துறை பேராசிரியர் முனை வர் இரா. இராஜகோபாலனுக்கு மருந்தியல் ஆராய்ச்சிக்கான விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
முனைவர் இரா. இராஜ கோபாலன் தொடர்ந்து தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ் களில் தமது ஆராய்ச்சிக் கட் டுரைகளை சமர்ப்பித்து வருவ துடன் மருந்தியல் ஆராய்ச்சியில் பல காப்புரிமைகளையும் பெற்று வருகிறார். அதன் தொடர்ச்சியாக Psoriasis என்று சொல்லப் படும் தோல் அலர்ஜி நோய் குறித்து தமது ஆய்வினை சமர்ப் பித்து 2023ஆம் ஆண்டிற் கான சிறந்த மருந்தியல் ஆராய்ச்சிக் கான விருதினை பெற்று கல்லூ ரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
விருது வென்ற பேராசிரியர் முனைவர் இரா. இராஜகோபா லனை கல்லூரியின் நிர்வாகத்தி னர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண்டனர்.