ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயணம் வெற்றி

1 Min Read

சென்னை, பிப்.18 வானிலை, பேரிடர் தொடர்பான எச்சரிக்கை தகவல் களை உடனுக்குடன் பெறுவதற்காக இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட இன் சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கை கோள், ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் சிறீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது. காலநிலை மாற்றம் ஏற்படும் நிலையில், வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதி பங்களிப் பின் கீழ் வானிலை ஆய்வுக்காக இன் சாட்-3டிஎஸ் எனப்படும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ நிறு வனம் வடிவமைத்தது.

இதை விண்ணில் செலுத்து வதற்கான 27.30 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று முன்தினம் (16.2.2024) மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. ஆந்திர மாநிலம் சிறீகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மய்யத்தின்2-ஆவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் நேற்று (17.2.2024) மாலை 5.35 மணிக்கு திட்டமிட்டபடி இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப் பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 18நிமிடங்களில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 253 கிமீ தொலை வில் உள்ள புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *