டில்லி விவசாயிகள் போராட்டம் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு – விவசாயி மரணம்!

1 Min Read

புதுடில்லி, பிப்.16 தலைநகர் ஷிங்கு எல்லையில் தொடர்புகைக் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட குருதாஸ்பூரைச்சேர்ந்த விவசாயி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
ஒன்றிய அரசிடம், குறைந்த பட்ச ஆதார விலை திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தலைநகர் டில்லிக்கு விவசாயிகள் 13.02.2024 அன்று டிராக்டர்களில் சென்றனர்.
ஆனால் அவர்களை தலைநகரில் அனைத்து எல்லையிலும் தடுத்து நிறுத்தி, இரவு பகல் பாராமல் புகைக்குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளால் தொடர்ந்து காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரைச்சேர்ந்த ஞான் சிங் (வயது 62) என்ற விவசாயி தொடர் நச்சுப்புகை வீச்சால் பாதிக்கபட்டு போராட்டக் களத்திலேயே உயிரிழந்தார். முதலுதவி அளித்தும், அவரை மேல் சிகிச்சைக்கு தலைநகர் டில்லிக்கு எடுத்துச்செல்ல பாதைகள் முழுமையாக அடைத்துவிட்டதால் செல்ல முடியாமல் அவர் வழியிலேயே உயிரிழந்தார் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *