குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டத்தை கொண்டு வர முடியாது ஒன்றிய அமைச்சரின் திமிர் பேச்சு

viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப். 14- அரசுடன் முறையான பேச்சுவார்த் தையை நடத்த விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் ஒன்றிய அமைச் சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விவ சாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதி யம், விவசாயிகள் மீது பதி யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தலைநகர் டில்லி யின் எல்லையை முற்று கையிட்டு விவசாய சங்கத் தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அனைத்துப் பங்குதாரர் களையும் கலந்தாலோசிக் காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என்றும், விவசாயிகள் அரசுடன் முறையான பேச்சுவார்த்தையை நடத்த முன்வர வேண்டும் எனவும் ஒன்றிய விவ சாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் ஆதாயங்களுக்காக விவ சாயிகளின் போராட் டத்தை இழிவு படுத்தக் கூடியவர்கள் குறித்து விவசாயிகள் கவனமாக வும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விவசாயிக ளுடன் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சு வார்த் தையில் ஒரு சில கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதாக வும், சில விவகாரங்களில் உடன்பாடு எட்டப்பட வில்லை என்றும் குறிப் பிட்ட அர்ஜுன் முண்டா, தொடர்ந்து பேச்சுவார்த் தைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *