அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்:

viduthalai
1 Min Read

இதில்தான் பாஜக மாநிலங்கள் ‘முன்னிலை’

புதுடில்லி, பிப். 13 – 10 ஆண்டுகளில் ஏராளமான ‘சாதனைகளை’ படைத்து விட்டதாக மோடி அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில், ‘சைபர் குற்றங்கள்’ எனப்படும் இணையதள குற்றங்களின் அதிகரிப் பிலும் மோடி அரசு ‘சாதனை’ படைத் துள்ளது. இதையும் மோடி ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். கையில் பணம் வைத் திருந்தால் ஆபத்து. பணத்தை மக்கள் கண்ணால் பார்க்க வேண்டாம். அலைபேசிகளில் பார்த்துக் கொள் ளலாம் எனக் கூறி இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற நடவ டிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆகா… ஓகோ என விளம்பரங்கள் செய்யப்பட்டன.
ஆனால், இதன்மூலம் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதி கரித்துக் கொண்டே போகின்றன. மோடி ஆட்சியில் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. 2020-ஆம் ஆண்டு 50 ஆயிரத்து 035 ஆக இருந்த சைபர் குற்றங்களின் எண் ணிக்கை 2022ஆம் ஆண்டு 65 ஆயி ரத்து 893 ஆக உயர்ந்துள்ளது. சைபர் குற்றங்களைத் தடுக்க உதவி மய்யம் தொடங்கியதிலிருந்து இதுவரை 4.7 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ரூ. 1,200 கோடி மட்டுமே மீட்கப்பட் டுள்ளது. 3.2 லட்சம் சிம் கார்டுகள் முடக்கப் பட்டுள்ளன. 49 ஆயிரம் பன் னாட்டு சந்தாதாரர்களின் சேவை முடக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 1.9 லட்சம் இணைய மோசடிப் புகார்களும், மகாராட்டிராவில் 1.25 லட்சம் மோசடிப் புகார்களும், குஜ ராத்தில் 1.21 லட்சம் மோசடிப் புகார்களும் பதிவாகியுள்ளன. சம் பந்தப்பட்ட இந்த மூன்று மாநிலங் களிலும் பாஜக ஆட்சிப் பொறுப்பில் உள்ளது என் பது குறிப் பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *