தமிழ்நாடு அரசு ஆணை

viduthalai
3 Min Read

குடும்ப அட்டை: கைவிரல் பதிவுக்கு பொதுமக்களை
ரேசன் கடைகளுக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது

சென்னை, பிப். 13- தமிழ்நாட் டில் தற்போது 2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப் பட்டு வருகின்றன.
இந்த குடும்ப அட்டை கள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பேர் பயன் பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாது காப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தி யோதயா அன்ன யோஜனா திட் டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டம் தமிழ் நாட்டில் செயல்படுத்தப் பட்டு வருவதால், உண வுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக் கப்பட்டு உள்ளது.
ரேசன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் எந்த ரேசன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என்று கடைக்காரர்கள் வலியு றுத்தி வந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்ப டுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழ்நாடு அரசு இப்போது விளக்கம் அளித்து உள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதா வது:- நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பு தொடர்பாக மாவட்டங்களுக்கு ஏற் கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சமயத்தில் நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பு பணியினை முடிக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
*நியாய விலை கடை களில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களது கை விரல் ரேகை வைக்கப் படும் போது ஆவணங்கள் ஏதும் கோரக் கூடாது.
*குடும்ப அட்டைதா ரரின் குடும்ப உறுப்பினர் கள் கைவிரல் ரேகை சரி பார்ப்பு மேற் கொள்ளப் படவில்லை எனில், அவர் களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, இன்றியமையாப் பண் டங்கள் வழங்கப்படாது என்றோ தவறான தக வல்களை வழங்கப்படக் கூடாது.
*குடும்ப அட்டைதா ரர்களின் வசதியின்படி, நியாய விலை கடைக்கு வருகை தந்து கை விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, அவர்களை கட்டாயப் படுத்தி நியாயவிலை கடைக்கு வர வழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.
நியாய விலை கடை யில் விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டை தாரர்களது வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கை விரல் ரேகை வைக்கும் பணியினை முடிக்கலாம்.
மேற்கூறியவாறு, அறி வுரைகளை பின்பற்றி கை விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை, பயனாளிக ளுக்கு எவ்வித இடை யூறுகள் இல்லாமலும், குழப்பங்கள் ஏதும் இல் லாமலும் முடிக்கப்பட நியாய விலை கடை பணி யாளர்களை அறிவுறுத்து மாறும் அப்பணியினை மேற்பார்வையிட சம்பந் தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்து மாறும் கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த உத்தரவின் நகல் ரேசன் கடைகளின் உயர் அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *