பகுதி நேரம் மட்டும் வேலை செய்யக் கூடாது பகுத்தறிவு!

viduthalai
6 Min Read

தொகுப்பு: வி.சி.வில்வம்

தருமபுரி, பிப்.13 “பகுதி நேரம் மட்டும் வேலை செய்யக் கூடாது பகுத்தறிவு”, எனத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாணவர்களிடையே வகுப்பெடுத்தார்!
தமிழ்நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடந்து வருவது யாவரும் அறிந்ததே! தமிழ்நாட்டில் மொத்தம் 70 கழக மாவட்டங்கள் உள்ளன. அவ்வகை யில் பெரியார் திருமண மண்டபத்தில், 11-2-2024 அன்று தருமபுரியில் நடைபெற்றது 41 ஆவது பயிற்சி வகுப் பாகும்! இந்நிகழ்வில் பங்கேற்று, “பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புகள்” எனும் தலைப்பில் கவிஞர்

திராவிடர் கழகம்

கலி.பூங்குன்றன் பேசியதாவது:
பெரியாரின் உழைப்பு யாருக்காக!

ராஜாஜி 6 ஆயிரம் பள்ளிகளை மூடினார். அரை நேரம் படிக்க வேண்டும், அரை நேரம் அப்பா செய்யும் தொழிலைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். விடு வாரா பெரியார்? தமிழர்கள் கல்விக்கு ஆபத்து என்ற வுடன் வெகுண்டு எழுந்தார். “தோழர்களே… பெட் ரோலும், தீப்பந்தமும் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற தைப் பிறகு அறிவிக்கிறேன்” என்றார். எனக்கு முதல மைச்சர்பதவியே வேண்டாம் என ஓடினார் ராஜாஜி.
அவருடைய உழைப்பு முழுவதும் உங்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் தான் இருந்தது. வெள்ளை யர்களின் ஆட்சியின் போது, இரண்டு முறை அவரைப் பதவி தேடி வந்தது. ஆனால் நிராகரித்துவிட்டார். 95 ஆண்டு வரை மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர் மீது கல் வீசினார்கள், கழுதை வாலில் நெருப்பு வைத்தார்கள், முட்டையை எறிந்தார்கள். ஆனால், ஓர் இடத்திலும் அவர் சறுக்கவே இல்லை. அதனால் தான் அவர் “பெரியார்” ஆனார்! பதவிக்குப் போகாவிட்டாலும், வெளியில் இருந்தே ஆட்சியை நகர்த்தி செல்லும் ஆற்றலோடு இருந்தார்!

முழு நேரமும் தேவை பகுத்தறிவு!

அவர் அடிக்கடி கூறுவது பகுத்தறிவு. எல்லோருக்கும் ஆறறிவு இருக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சாலையில் செல்லும் போது மாட்டு சாணத்தை மிதித்தால், அசிங்கம் என்று காலில் தண்ணீர் ஊற்றி கழுவுகிறோம். அதே சாணத்தைப் பிடித்து வைத்து, இரண்டு அருகம்புல் சொருகினால் ‘சாமி’ என்று கும்பிடுகிறோம். ஆக ஒரு இடத்தில் வேலை செய்யும் பகுத்தறிவு, மற்றொரு இடத்தில் வேலை செய்யவில்லை.
நமது தாய்மொழி தமிழ் என்கிறோம். ஆனால் பெயர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. நமக்கென்று மொழி, கலாச்சாரம், பண்பாடு இருக்கின்றன. அதை அழித்துவிட்டு ஆரியம் வந்து அமர்ந்து கொண்டது. மொரீசியஸ் நாட்டில் வாழும் தமிழர்களின் பிள்ளை களுக்குத் தமிழ் பேசத் தெரியாது என்கிறார்கள். மொழி அழிவு தானே, இன அழிவு! ஆகவே தான் இனம், மொழி, பகுத்தறிவு சிந்தனைகளை எடுத்துக் கூற, இதுபோன்ற பயிற்சிப் பட்டறைகள் நடைபெறுகின்றன!

செம்மொழியான தமிழ் மொழியாம்!

தமிழர்களின் பெயர்களைக் கேட்டால் பெரும்பகுதி தமிழில் இருக்காது. அதிலும் மோசமான பொருளடங்கும் பெயர்கள் அதிகம் வந்துவிட்டன. மொழி அடை யாளத்தை விட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பெரியார் உழைத்தார். முன்பு அக்கிராசனர், பிரசங்கம், நமஸ்காரம் என்றனர். இப்போது தலைவர், சொற் பொழிவு, வணக்கம் என மாறியுள்ளது. அதேபோல நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், அரங் கண்ணல் போன்ற தமிழ்ப் பெயர்கள் எங்கிருந்து வந்தன? பெரியார் ஏற்படுத்திய உணர்ச்சி அல்லவா! இவ்வளவிற்குப் பிறகும் தமிழில் சமஸ்கிருத ஊடுருவல் தொடர்கிறது.

மயிலாடுதுறை, திருமறைக்காடு, திருமுதுகுன்றம், புளியந்தோப்பு, சிற்றம்பலம், குடமூக்கு என்று அழகழ காய் இருந்த ஊர் பெயர்களை எல்லாம் மாற்றினார் களே? இதுகுறித்து எந்தத் தமிழ் மன்னர்கள் கவலைப் பட்டார்கள்? அருள்மொழி வர்மன் என்கிற அழகிய தமிழ்ப் பெயரை இராஜராஜ சோழன் என்று மாற்றிய வர்கள் அல்லவா இவர்கள்? வடஇந்தியாவில் இருந்து பார்ப்பனர்களை அழைத்து வந்து நாசம் செய்தார்கள்! சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்கி, வேதம் கற்க வழி செய்தார்கள்!

அய்வருக்கும் தேவி; அழியாத பத்தினி!

தமிழர் வீட்டுத் திருமணங்களைத் தமிழர்கள் ஏன் நடத்துவதில்லை? அந்த அதிகாரம் பார்ப்பனர்களுக்கு எப்படி கிடைத்தது? நம் வீட்டு நிகழ்ச்சிகளில் சமஸ் கிருதத்திற்கு என்ன வேலை? அதுவும் திருமணத்தில் ஓர் மந்திரம் கூறுவார்கள். அவ்வளவு ஆபாசமாக இருக்கும். மணமேடையில் உள்ள பெண்ணைப் பார்த்து, இந்தப் பெண்ணிற்கு சோமன், கந்தர்வன், அக்னி, அர்ச்சகர் ஆகிய நால்வரும் கணவராக இருந்து, கடைசியாகவே மணமகனுக்கு மனைவி என அந்த மந்திரம் கூறுகிறது.
குற்றாலத்தில் நடைபெற்ற ஒரு பயிற்சி முகாமில் ஒரு இளைஞர், “திருமண மந்திரங்கள் இவ்வளவு கேவலமாக இருக்கிறதே, பார்ப்பனர் வீடுகளிலும் இதே மந்திரங்கள் தான் சொல்லப்படுகிறதா?”, என்று கேட் டார். வீட்டிலும் அதையே தான் சொல்வார்கள். அப்படி சொன்னாலும் அவர்களுக்கு வெட்கமில்லை. காரணம் அய்வருக்கும் தேவி, அழியாத பத்தினி என்பதுதான் அவர்களின் கலாச்சாரம்.

ஒரே கொசுத் தொல்லை!

இன்று வரை மனுதருமத்தில் இவைதானே இருக்கிறது? பிறப்பில் பேதம் என்றார்கள், காலில் பிறந்தோம் என்றார்கள், அய்ந்தாம் இடத்தில் பஞ்சமர்கள் என்றார்கள். இந்த மனுதர்மத்தைத் தான் அரசியல் சட்டமாக்க துடிக்கிறார்கள். நமது பிள்ளைகள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு கொண்டு வந்துள்ளார்கள், அதுவும் இந்த வகைகளில் ஒன்றுதான்! நமக்கு ‘கொசு’ பிரச்சினை என்றால், ஒவ்வொரு கொசுவாக ஒழிக்க முடியாது. அது உற்பத்தி ஆகும் குப்பைகளையும், சாக்கடைகளையும் ஒழித்தாக வேண்டும். நமது வளர்ச்சிக்கு எதுவெல்லாம் தடையாக இருந்ததோ, அதையெல்லாம் ஒழிக்கப் பாடுபட்டவர் தான் பெரியார்!

தாத்தாவுக்குப் பிடித்த கருவாடு!

பார்ப்பனர்கள் நமக்கு அறிமுகம் ஆனவர்களாக இருப்பார்கள். நம் வீடுகளில் மரணம் ஏற்பட்டால் விசா ரிக்கக் கூட வரமாட்டார்கள். ஆனால் கருமாதி செய்வ தற்குப் பையை எடுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள். பணமே பிரதானம்.
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் கலந்து பஞ்சகவ்யம் என்கிற பெயரில் இன்னமும் குடிக்க வைக்கிறார்கள். நம்மாட்களும் சிந்தாமல், சிதறாமல் குடித்து, மீதத்தைத் தலையில் தேய்த்துக் கொள்கிறார்கள். அதேபோல திவசம் என்கிற பெயரில், அவர்களுக்குத் தேவையான ஒரு மாத மளிகைப் பொருட்களை எழுதித் தருகிறார்கள். . நம் தாத்தாவுக்குப் பிடிக்கும் என்று கூறி பச்சரிசி, காய்கறி களும் வாங்க சொல்வார்கள். ஆனால் நமது தாத்தா புழுங்கல் அரிசி சோறும், கருவாடும் தான் விரும்பி சாப்பிடுவார். அதை இந்தப் பார்ப்பனர்கள் மேலோகத் திற்கு அனுப்புவதில்லை.
தவிர ஒரு ஆண்டில் 180 நாட்களைக் கெட்ட நேரம் என்கிறார்கள். நமக்குத்தான் அது பாதிப்பு. சுரண்டுகின்ற பார்ப்பனர்களுக்கு 365 நாட்களும் நல்ல நேரமே! எனவே எதையும் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து, நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

வகுப்பும், தலைப்பும்!

தொடர்ந்து ‘தந்தை பெரியார் ஓர் அறிமுகம்’ என்கிற தலைப்பில் ஆசிரியர் மா.அழகிரிசாமி, ‘சமூகநீதி வரலாறு’ எனும் தலைப்பில் முனைவர் க.அன்பழகன், ‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்’ எனும் தலைப்பில் வி.சி.வில்வம், ‘மந் திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்’ என்ற தலைப்பில் ஈட்டி கணேசன் ஆகியோர் எடுத்தனர்! நிகழ்ச்சியை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் நெறியாள்கை செய்தார்.
வகுப்புகளுக்கு இடையே மாணவர்களுக்கு ஆசிரியர் கி.வீரமணி பேசிய காணொலி பேச்சு ஒளி பரப்பு செய்யப்பட்டது!

திராவிடர் கழகம்பயிற்சியில் பங்கேற்ற மாணவரின் வியப்பு

பெரியாரியல் பயிற்சி வகுப்புக் குறித்து, தம் கருத்தைப் பகிர்ந்து கொண்டார் ஒரு மாணவர்:
நான் அம்பேத்கர் இயக்கத்தில் இருக்கிறேன். நானும் வகுப்புகள் எடுப்பேன். பெரியார் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் வந்தேன். பெரியார் நூல்கள் படித்திருக்கிறேன். ஆனால், ஆசிரியர் கி.வீரமணி அவர்களைக் குறித்து இன்றுதான் முழுமையாக அறிந்து கொண் டேன். பத்து வயதில் தொடங்கிய பொது வாழ்வு, 91 வயது வரை நீடிக்கிறது என்பது வியப்பாக இருக் கிறது. பயணங்கள், எழுத்துகள், பேச்சுகள், பிரச் சாரங்கள், போராட்டங்கள், கல்விப் பணிகள், இட ஒதுக்கீட்டு சாதனைகள் என கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது” என்று அந்த மாணவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *