மோடி ஆட்சியின் பொருளாதாரம் – சென்செக்ஸ் 523 புள்ளிகள் வீழ்ச்சி!

viduthalai
1 Min Read

மும்பை, பிப்.13- இந்திய பங்குச் சந்தைகள் நேற்று (12.2.2024) சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் நேற்று 523 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 71,072இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட் டெண்ணான நிப்டி, 166 புள்ளிகள் சரிந்து 21,616இல் நிறைவடைந்தது.
வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவது மற்றும் முதலீட்டாளர்கள் லாபத்தை எடுப்பதற்காக பங்குகளை அதிக அள வில் விற்க முன்வந்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தைகள் சரிந்ததாக நிபுணர்கள் கூறியுள்ளனர். நேற்றைய வர்த்தகத்தில் மூலதன பொருட்கள், எண்ணெய் எரிவாயு மற்றும் உலோக துறை சார்ந்த பங்குகள் அதிகம் வீழ்ச்சி யடைந்தன. அய்.டி., சுகாதார துறை சார்ந்த பங்குகள் உயர்வைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 1,004 பங்குகள் உயர்வுடனும் 2,986 பங்குகள் சரிவுடனும் முடிந்தன. 89 பங்குகள் விலை மாற்றமின்றி முடிவடைந்தது. டாடா ஸ்டீல், என்டிபிசி, எஸ்பிஅய், இண்டஸ்இன்ட் பாங்க், அய்டிசி மற்றும் கோட்டக் பாங்க் ஆகிய பங்குகள் அதிகம் சரிந்தன (2.76% வரை). விப்ரோ, எச்சிஎல் டெக், மகிந்திரா அன்ட் மகிந்திரா, இன்போசிஸ் ஆகிய பங்குகள் அதிக உயர்வை (2.26% வரை) சந்தித்தன.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *