ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும்! தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்

viduthalai
2 Min Read

சென்னை,பிப்.13- விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் நிறுவனத் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அரசமைப்புச் சட்டமரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் சட்டப் பேர வையில் நடந்து கொண்டுள்ள ஆளு நர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக்கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப் புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சி யின் பிரதிநிதியைப் போலவே செயல் பட்டு வருகிறார். எனவே, அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட் டிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மாநில அரசால் தயாரித்துக் கொடுக் கப்படும் உரையைப் படிப்பதென்பது ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் விதித் துள்ள கடமையாகும். அதை ஆர்.என்.ரவி அவர்கள் நிராகரித்துள்ளார். இது, மக் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிப் பதாகும்.
அரசமைப்புச் சட்டப்படி விதிக்கப் பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி அவர்கள் எந்த அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் ஆளுநர் பதவி வகிப்பதற்கு மட்டு மல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும்கூடத் தகுதியற்றவர் என் பதையே அவரது செயல்கள் காட்டு கின்றன.
ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பொதுவெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பிவருகிறார்.
ஜாதியின் அடிப்படையிலும், மதத் தின் அடிப்படையிலும் மக்களைப் பிள வுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துகளைத்தொடர்ந்து கூறி வருகிறார்.
அதன்மூலம் இங்கே சட்டம் ஒழுங் குப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக் கிறார். அவர் வகிக்கும் ஆளுநர் பத வியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப் பயன்படுத் துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண் டிருக்க முடியாது. இத்தகைய போக் குள்ள அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருப்பதே தமிழ்நாட்டு மக்களுக் குக் கேடாக முடியும்.
எனவே, அவரைத் தமிழ் நாட்டிலி ருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கு மாறு தமிழ்நாடு அரசைக்கேட்டுக் கொள்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தரு வதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலை யற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் ஆளுநர் பயன்படுத் தப்படுகிறார்.
மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் ஒன்றிய அரசு பயன் படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்று கிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக் காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் ஆளுநர் கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.
மாநில அரசுக்கும் ஒன்றிய அர சுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்த விதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ் நாடு உட்பட பல்வேறு மாநில அரசு களும்தொடர்ந்து முன்வைத்து வருகின் றன.
‘இந்தியா கூட்டணி ஆட்சி அமைத் ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும்’ என்ற வாக்குறுதியை தேர்தல் வாக் குறுதியாக வழங்கவேண்டும் என ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *