12-1-2024 அன்று ஆவணம் பகுதியில் உள்ள டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கபடிப் போட்டியில் பங்கு பெற்ற மாணவிகள் முதல் பரிசை வென்றனர். 18-1-2024 அன்று பாபநாசத்திலுள்ள அரசினர் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் மாணவிகள் முதலிடம் பெற்றனர். 8-1-2024 அன்று பாபநாசத்திலுள்ள அரசினர் பாலிடெனிக்கில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் மாணவிகள் முதலிடம் வென்றனர். 7-1-2024 அன்று புதுப்பட்டியிலுள்ள ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற கோகோ விளையாட்டில் மாணவிகள் முதலிடம் பெற்றனர். 27-1-2024 அன்று நடந்த எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் முதல்பரிசை வென்றனர். 9-12-2023 அன்று நடைபெற்று முடிந்த கூடைப்பந்து விளையாட்டில் மாணவர்கள் இரண்டாமிடம் வென்றிருந்தனர். இவ்விருதுகளை வென்று இக்கல்லூரிக்கு பெருமை சேர்ந்த பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியரை நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார். (8-2-2024)
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு நிறுவனத் தலைவர் பாராட்டு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books