அரசு, பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்!

Viduthalai
2 Min Read

சென்னை, அக்.8- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதி யானவையாக கருதப்படும்.

பன்னாட்டு  போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் / பங்கேற்றவர்கள்)

• கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள்,

• காமன்வெல்த் விளையாட்டுபோட்டிகள்

• ஆசிய விளையாட்டுப்போட்டிகள்

• பன்னாட்டு  ஒலிம்பிக் கமிட்டியால் (IOC)  அங்கீகரிக் கப்பட்ட பன்னாட்டு  விளையாட்டு கூட்டமைப்பால் (மிஷிதி) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டு களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் வாகையர் பட்டப் போட்டிகள்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டு களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, (IOC) ஆல் அங்கீகரிக்கப்பட்ட (ISF)  இன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் பட்டப் போட்டிகள்

• 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது (IOC)  ஆல் அங்கீகரிக்கப்பட்ட (ISF)  இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய வாகையர் பட்டப் போட்டிகள்

• பன்னாட்டு பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான பன்னாட்டு விளை யாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளை யாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.

தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும் )

• தேசிய விளையாட்டுப்போட்டிகள்,

• இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய வாகையர் பட்ட விளையாட்டுப்போட்டிகள்

மாநில அளவிலான வாகையர் பட்டப் போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)

• தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT)  அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில வாகையர் பட்டப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருத்தப்படும்.

மேலும் 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் மேற்காணும் வழி காட்டுதலின்படி 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் விண்ணப்ப த்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் 31.10.2023-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளை யாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்துகொள்ளப்படுகிறது.

– இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *