வெறியே உன் பெயர்தான் பா.ஜ.க.வா? பேராசிரியர் மு. நாகநாதன் கேள்வி

viduthalai
5 Min Read

மக்களாட்சி முறையில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என மாறி மாறி ஆட்சிக்கு வருவது எதிர்க்கட்சியாக இயங்குவது ஜனநாயகத்தின் அடிப்படை.
எதிர்க்கட்சிகளை, எல்லா முறை களிலும் எல்லா வகைகளிலும் எல்லா நிருவாகக் கருவிகளையும் பயன்படுத்தி அடக்குமுறை வழியாக ஆளும் கட்சி ஒடுக்க முற்படுவது, ஜனநாயகத்தை அடியோடு சிதைக் கும் செயலாகும்.
1975 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா நெருக்கடி நிலையை அறி வித்த போது கடும் கண்டனங்களைத் தெரிவித்து, எதிர்த்துச் சிறை சென்ற வர்கள் அன்றைய ஜனசங்க கட்சி யின் தலைவர்கள்.

ஜனநாயக வேரை வெட்டுகிறார்கள்…
அன்றைய ஜனசங்கத்தின் அரசி யல் உருமாற்றம் தான் இன்றைய பா.ஜ.க. அன்று ஜனநாயகக் காவலர் கள் இன்று ஜனநாயகத்தின் வேரை வெட்டுவதற்குத் துடியாய்த் துடிக்கின் றனர்.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க நரேந்திரர் தலைமையில் ஒன்றிய அரசு 24 மணி நேரமும் முனைப்போடு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் எல்லா இழிதகை சதித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
1975 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்ட நெருக்கடி நிலை, 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு முடிவுக்கு வந்தது.
கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றிய அரசமைப்புச் சட்டத்திருத் தத்தைத் தவிர, நெருக்கடி நிலை காலத்தில் கொண்டு வரப்பட்ட அனை த்து சட்டப் பிரிவுகளும் திரும்பப் பெறப் பட்டன.
ஆனால் 2014இல் பாஜகவின் நரேந்திரர் பிரதமர் பதவிக்கு வந்த பிறகு மக்கள் விரோத சட்டங்கள் ஒவ் வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொட ரிலும் வரிசைக்கட்டி நிறைவேற்றப் படுகின்றன.
இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையையும் மாநிலங்களின் உரிமைகளும் பன்முகத் தன்மைக ளும் பல நேர்முகச் சட்டங்கள், மறை முகத் திட்டங்கள் வழியாகப் பறிக்கப் பட்டு வருகின்றன.

ஆட்சியைப் பயன்படுத்தி நிருவாக அமைப்புகளில் நீதி அமைப்புக்களில் பாஜக ஆட்சியாளர்களுக்கு அடி பணி ந்து போகும் ஆட்களை நியமனம் செய்து விட்டனர்.
நாட்டின் நம்பிக்கைக்குரிய நீதி மன்றங்கள் அளிக் கும் தீர்ப்புகளே இதற்குச் சான்றுகளாக அமைகின்றன.
திசை திருப்பும் புரட்டுகள்
காந்தியாரை நேருவை இழிவுப் படுத்தும் திட்டமிட்டு உருவாக்கிய உரைகள், மக்களிடம் எதிர்ப்பு பெருகி னால் திசைதிருப்பும் புரட்டுகள் செய்வது அன்றாட சங்கி அரசியலாகி வருகிறது. ஆளு நர்கள் அடியாட்க ளாக மாறி வருகின்றனர்.
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்க ளில் நிருவாகத்தைச் சீர்குலைவு செய்வது, அரசமைப்புச் சட்டத்தின் விதிகளை அவமதிப்பிற்கு உள்ளாக்கு வது நீதிமன் றங்கள் கேள்வி எழுப்பினால் குரங்கு பல்டி அடிப்பது.

ஆனால் அதே சட்ட விரோத மரபுகளை மீண்டும் பின்பற்றுவது என்பதெல்லாம் மனதின் குரல் நாயக னுக்குத் தெரியாமலா அரங்கேறு கிறது!
இது வரை இந்தியா கண்டிராத இராமப் புராணங் களை விஞ்சிய ஆளுநர் ‘புரட்டு‘ அனுமார் புராணங் கள்.
2024 ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில முதலமைச் சர்களைப் பதவி இறக்கம் செய்ய வும், மிரட்டவும், பல கட்சித் தலைவர்க ளைத் திரைப்பட நடிகர், நடிகைகளை ஊடக முதலாளிகளை பாஜகவுக்குக் காவடித் தூக்கவும் உச்ச நிலை அரசியல் போக்கிலி தனத்தை ஆளும் பாஜக கையாண்டு வருகிறது.

பரம ரகசியம்
காலையில் வானொலியைக் கேட்டால் நரேந் திரருக்கு நன்றி என்று பல குரல்கள் ஒலிக்கின்றன. யார் இவர்கள்? நன்றி சொல்லும் மோடி திட்டப் பயனாளிகள்.
‘‘எங்கள் ஊரில் எல்லா வீடுகளி லும் குடிநீர் கொட்டுகிறது. குறைந்த வட்டிக் கடன்களால் எங்கள் தொழில்கள் வான் ஊர்தி வேகத்தில் பறந்து உயர்ந்து வருகிறது. வறுமை நீங்கி விட்டது. பாலும் தேனும் எங்கள் வாழ்க்கையில் பாய்ந்தோடுகிறது’’. இது போன்ற பலரின் குரல்கள் ஒலிக்க வைக்கப்படுகின்றன. ஒன்றிய அரசின் நேரடி திட்டங்கள் என்ற பெயரில் மாநிலங்களுக்குத் தெரியா மலேயே பல லட்சம் கோடியை வீணடித்து வருகிறது மோடி அரசு.
உரியக் கண்காணிப்பு இல்லாது நிறைவேற்றப்படும் திட்டங்கள். திட்டங்கள் வெற்றி பெற்ற தற்கான புள்ளி விவரங்கள் மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் போன்றே யாரும் அறிய முடியாத பரம ரகசியம்.மோடி பெயரில் உள்ள திட்டங்கள் பயனாளிகள் யார் என்பது மாநில அரசுகளுக்குத் தெரியாது. இது தான் மோடியின் புதிய இந்தியா?
ஒன்றிய அரசின் நேரடி பல லட்சம் கோடி ரூபாய் திட்டங்களின் பயன் பாடுகள் எவை? எவை? ஒரு புள்ளி விவரம் சங்கி அரசின் பொய்யை அம்பலப்படுத்துகிறது.

ரத்தச் சோகை அதிகம்… எங்கே?
குழந்தைகள் நலனே நாட்டின் நலன்.
எதிர் காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பு. நம் நாட்டில் 6 மாதங்கள் தொடங்கி 5 வயது வரை குழந்தைகள் ரத்தச் சோகை நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர். எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக் கையில் இரத்த சோகை உள்ள குழந்தைகள் உள்ளனர்? அதானி-அம்பானிகள் உள்ள நரேந்திரர் அமித்ஷா அரசியல் இரட்டை யர்கள் உலா வரும் குஜராத் மண்ணில் மேற்குறிப்பிட்ட வயது பிரிவில் 79.7 விழுக்காடு குழந்தைகள் ரத்தச் சோகை நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் ரத்தச் சோகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 64.4 விழுக்காடு. பீகாரில் 69.4 விழுக்காடு குழந்தை கள் இந்த நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர். நரேந்திரர் ஆட்சியில் இந்தியா வளர்கிறது என்றால் யார் பயன் பெற்றுள்ளார்கள்?
வளர்ச்சியின் பயன் மானுட மேம்பாட்டில் முடிய வேண்டும். தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் முன்னிலை வகிக்கின்றன. தென்னக மாநிலங்கள் ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு முறையால் வஞ்சிக்கப்படு கின்றன.
இது போன்ற எண்ணற்ற வளர்ந்து வரும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நிதி அதிகாரங்க ளை மாநில, உள்ளாட்சி அமைப்புகளு க்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
மக்களைப் பிரித்துப் பன்முகத் தன்மைகளைச் சிதைத்து எதிர்க்கட்சி களை எதிரிக்கட்சிகளாகப் பார்ப்பது பாஜக கடைப்பிடித்து வரும் பாசிச அரசியலாகும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் உரிமைகள் காப்ப தற்காக பாஜகவின் வெறி அரசியல் முறியடிக்கப்பட வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *