தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.11 நாடாளு மன்ற நிதிநிலை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று (10.2.2024) தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் நாடாளுமன்ற தி.மு.க. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய் தனர். இலங்கை கடற் படையால் கடந்த 28 நாள் களில் மட்டும் 88 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் 12 மீன்பிடி பட குகள் சிறைபிடிக்கப்பட்டுள் ளன. இதுதொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் (9.2.2024) கடிதம் எழுதினார்.

இந்நிலையில், நாடாளு மன்ற நிதிநிலை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, மக்களவையில் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு, தமிழ்நாடு மீனவர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி திமுக உறுப்பினர்கள் தாக்கீது கொடுத்திருந்தனர். அவை கூடியதும், ராமன் கோயில் கட்டப்பட்டது மற்றும் குழந்தை ராமன் சிலை பிராண பிரதிஷ்டை குறித்த தீர்மானத் தின் மீதான விவாதத்தை மக்களவை தலைவர் ஓம் பிர்லா தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் தமிழ்நாடு மீனவர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமெனவும், அதுதொடர்பான தாக்கீதுக்கு அனுமதி வழங்கவும் முழக்க மிட்டனர். இதற்கு மக்களவைத் தலைவர் அனுமதிக்காததால், அவையை புறக்கணித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதே போல, மாநிலங்கள வையில் வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் பேசிய மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் திருச்சி என்.சிவா, ‘‘ சென்னை வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய பா.ஜ. அரசு ஒரு ரூபாய் கூட நிதி தராமல் உள்ளது’’ என்றார். மேலும், ஒன்றிய பா.ஜ. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக திருச்சி சிவா கூறும் முன்பாகவே அவர் பேசுவது கேட்காமல் இருக்க மைக் அணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள்அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *