பெரியார் பெருந்தொண்டர் நெடுவை மு.முருகையன் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் நினைவுரை

Viduthalai
3 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

நெடுவாக்கோட்டை, அக். 9- உரத்தநாடு ஒன்றியம், நெடுவாக்கோட்டையில் பெரியார் பெருந்தொண் டர் நெடுவை மு.முருகை யன் படத்தினை 7.10.2023 அன்று தமிழர் தலைவர் திறந்து வைத்து  பெரியார் பெருந்தொண்டர் முருகையன்   கழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளை யும், தன் வாழ்வில் இறுதி வரை கழக தொண்டராக இருந்து கொள்கை வீர ராக மறைந்ததையும், நெடுவாக்கோட்டையில் கழகத்தில் இருந்து மறைந்த  சுயமரியாதைச் சுடரொளிகள் நெடுவை வை.குப்புசாமி உள்ளிட்ட தோழர்களை நினைவு கூர்ந்து நெடுவாக் கோட்டை என்றும் கழ கத்தின் கோட்டையாக விளங்குவதை எடுத்து கூறி நினைவுரை ஆற்றினார்.

நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் ஒன் றிய ப.க தலைவர் நெடுவை கு.நேரு வரவேற்று உரை யாற்றினார்.

பெரியார் அறக்கட் டளை உறுப்பினர் நெடுவை கு.அய்யாத்துரை தலை மையேற்றார்.

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ராமச் சந்திரன், முன்னிலை யேற்று நினைவுரை ஆற் றினார்.

திராவிடர் கழக ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங், மாவட்ட கழக செயலாளர் அ.அருணகிரி, ஒன்றிய கழக தலைவர் த.ஜெகநாதன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.கார்த்தி கேயன், பெரியார் பெருந் தொண்டர் நெடுவை தோ.தம்பிக்கண்ணு, நெடுவாக்கோட்டை ஊராட்சி மன்றத் தலை வர் த.ஜெகதீசன் ஆகி யோர் நினைவேந்தல் உரை யாற்றினார்கள்.

நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குண சேகரன், மாநில தொழி லாளரணித் தலைவர் மு.சேகர், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன்,மாநில மாணவர் கழக செயலா ளர் இரா.செந்தூர்பாண் டியன், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கு.ஜெயமணி, ஒன்றிய செயலாளர் மாநல்.பரம சிவம், ஒன்றிய பெருந் தலைவர் பார்வதி சிவ சங்கர், மாநில  இளைஞ ரணி துணைச்செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட மகளிரணி தலைவர் இ. அல்லிராணி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார், ஒன்றிய துணைத் தலைவர் இரா.துரைராஜ், ஒன்றிய துணை செயலா ளர்கள் இரா.சுப்ரமணி யன், நா.பிரபு, ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன், செயலா ளர் க.அறிவரசு, நகர கழக தலைவர், பேபி.ரெ.ரவிச்சந்திரன், செய லாளர் ரெ.ரஞ்சித்குமார், மாவட்ட வழக்குரைஞ ரணி செயலாளர் க.மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், செய லாளர் பேபி ரெ.ரமேஷ், நெடுவை கிளைகழக செயலாளர் கு.லெனின், வெ.விமல், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராம லிங்கம், தெற்கு பகுதி செயலாளர் க.சுடர் வேந்தன், மேற்கு பகுதி செயலாளர் இரா.மோகன் தாஸ், நகர துணைச்செய லாளர் இரா.ராவணன், நகர இளைஞரணி துணைச் செயலாளர் அ.மாதவன், நெடுவை கு.வைத்திலிங்கம், ந. காம ராசு, ந.சங்கர், கு.கவுதமன், கு. குட்டிமணி, தொழில திபர் கே. எஸ்.பி. ஆனந் தன், கக்கரை கோ.ராம மூர்த்தி, ஒக்கநாடுமேலை யூர் நாவீரத்தமிழன், பொறியாளர் ப.பால கிஷ்ணன், மா.தென்னகம், சடையார் கோவில் குழந்தைவேல், மண்டலக் கோட்டை அ.செந்தில் குமார், த.சுரேந்தர், கக்கரைக் கோட்டை வீர. இளங்கோவன், புதுவ ளவு மெய்யழகன், கண்ணை கிழக்கு இரா.செந்தில் குமார் உள்ளிட்ட கழகத்தோழர்களும், அனைத்து கட்சி நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் நிகழ் வில் கலந்து கொண்டு சிறப்பினர்.

தமிழர் தலைவர் எழு திய தாய் வீட்டில் கலை ஞர் என்ற நூலினை பல் வேறு இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் 32 நூலினை தமிழர் தலை வர் அவர்களிடம் பெற் றுக்கொண்டனர்.

நிகழ்விற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உரத்தநாடு ஒன்றிய கழ கத்தின் சார்பில் உரத்த நாடு பெரியார் சிலை அருகிலும், நெடுவாக் கோட்டை கிளை கழ கத்தின் சார்பில் நெடுவை பெரியார் சிலை அருகி லும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரியார் பெருந் தொண்டர் முருகையன் குடும்பத்தின் சார்பில் மகன்கள் மு.காமராஜ், மு.ஆனந்தன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து வர வேற்றனர்.

வருகை தந்த அனை வருக்கும் பெரியார் பெருந்தொண்டர் முரு கையன் அவர்களுடைய மகன் வழக்குரைஞர் மு. வீரமணி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *