கேரளாவில் கோட்சேவை பெருமைப்படுத்தி காவி கருத்தொலி பேராசிரியைமீது வழக்கு

viduthalai
0 Min Read

திருவனந்தபுரம், பிப்.5- கேரள மாநிலம் கோழிக்கோடு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.அய்.டி.) கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியையாக இருப்பவர் ஷைஜா ஆண்டவன். இவர், முகநூலில் வந்த ஒரு பதிவுக்கு கருத்து தெரிவிக்கையில், கோட்சே இந்தியாவை காப்பாற்றியதில் பெருமை உண்டு என குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பான எஸ்.எப்.அய். கிளை செயலாளர் அஸ்வின், குன்னங்குளம் காவல் துறையில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் பேராசிரியை ஷைஜா ஆண்டவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *