ஆளுநர் ஆர்.என். ரவி டில்லி பறந்துள்ளார்

viduthalai
2 Min Read

ஆளுநர் ஆர்.என். ரவி டில்லி பறந்துள்ளார்
வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில்
அவர் ஆற்றும் உரை கடந்த ஆண்டு போல பிரச்சினையாகுமா?

சென்னை, பிப். 5- ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக நேற்று (4.2.2024) டில்லி புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் பிப். 12ஆம் தேதி தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார்.
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு -ஆளு நர் இடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடுகள் காரணமாகவும், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்படாததாலும், இந்த ஆண்டு கூட்டத்துக்கு ஆளுநர் அழைக்கப்படுவாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்தும், அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை ஆளு நர் தெரிவித்து வந்தார்.

எனினும்,சட்டப்பேரவை கூட்டத் தொடரை சமீபத்தில் ஆளுநர் முடித்து வைத்தார். தொடர்ந்து, பேரவையின் இந்த ஆண்டு கூட்டத் தொடரை தொடங்கவும், அதில் உரையாற்றவும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, பிப்.12-ஆம் தேதி காலை 10 மணிக்குதமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார்.
2023 ஜனவரி மாதம் நடந்தஆண்டின் முதல் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை நீக்கியும், சேர்த்தும் ஆளுநர் வாசித்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக அவர் இருக்கும்போதே சட்டப் பேர வையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஆளுநர் பாதியிலேயே வெளியேறி னார். அதன்பிறகு, அரசு அளித்த உரையே பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு, ஆளுநர் உரை தயாரிக்கப்பட் டுள்ள நிலையில், ஆளுநரின் நிலைப் பாடு குறித்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த சூழலில், ஆளுநர் ரவி நேற்று (4.2.2024) திடீரென டில்லி புறப்பட்டுச் சென்றார்.
அவரது பயணம் திட்டமிட்டது. சொந்த விஷயமாக செல்கிறார் என்று கூறப்பட்டாலும், 3 நாட்கள் டில்லியில் தங்கியிருப்பார் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *