ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

10.10.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்

* சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய அய்ந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும், இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* காவிரி விவகாரம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தல்

* ‘ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆட்சிக்கு வந்தவுடன் நாடு தழுவிய ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு’:. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* பத்திரிகையாளர்கள் சந்திப்பில், உங்களில் எத்தனை பேர் தலித், ஓபிசி; கைகளை உயர்த்துங்கள், ராகுல் வேண்டுகோள். ஒருவரும் இல்லாத நிலையில் இதற்குத்தான் ஜாதி வாரி கணக்கெடுப்பை கோருகிறோம் என ராகுல் பேச்சு.

தி டெலிகிராப்

* இந்த வழக்கு போலியானது, சீனாவில் இருந்து ஒரு பைசா கூட வரவில்லை. போலியாக வழக்கை அரசு பதிவிட்டுள்ளதாக நியூஸ் கிளிக் முதலாளி பிரபீர் புர்காயஸ்தா டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *