ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்க பி.ஜே.பி. சதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

தேவ்கர், பிப். 4- வரும் மக்கள வைத் தேர்தலை முன் னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை ‘பாரத் ஜோடோ நியாய நடைப்பயணம்’ மேற்கொண்டு வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் மாவட்டத்துக்கு அவர் வந்தடைந்தார்.

பாரத ஒற்றுமை நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜார்க்கண்டின் தேவ்கர் பகுதியை ராகுல் காந்தி நேற்று (3.2.2024) சென்றடைந்தார். முன்ன தாக ஜார்க்கண்டின் கோடா பகுதியில் அவர் பேசியதாவது:

பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் நாட் டில் பிரிவினையை தூண்டி வருகின்றன. மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்து வருகின்றன. நாங்கள் அன்பை முன்னி றுத்தி செயல்படுகிறோம். அனைத்து தரப்பு மக்க ளையும் அரவணைத்து செல்ல விரும்புகிறோம்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விவசாயிக ளின் கடன்கள் ரத்து செய்யப்பட்டன. பிரத மர் நரேந்திர மோடி பெரும் தொழிலதிபர்க ளின் கடன்களை மட் டுமே ரத்து செய்கிறார். விவசாயிகளின் கடன் களை ரத்து செய்ய மறுக் கிறார். நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச் சப்படுகின்றனர்.
ஜார்க்கண்டில் மக்க ளால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது. பாஜகவின் சதித் திட்டம் வெற்றி பெற இண்டியா கூட்டணி அனுமதிக் காது. பாஜகவிடம் அதி காரமும் பண பலமும் இருக்கிறது. அதற்குஅஞ்ச மாட்டோம். பாஜகவின் பிரிவினை அரசிய லுக்கு எதிராக தொடர்ந்து போராடு வோம்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *