காவிரி உரிமைக்காக டெல்டா மாவட்டங்களில் பொது வேலை நிறுத்தம் பெரும் வெற்றி! கே. பாலகிருஷ்ணன் அறிக்கை

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,அக்.12- இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

காவிரி நீர் உரிமையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகும் அரசியல் ஆதாயத்திற்காக செயல்பட்டுவரும் கருநாடக அரசைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் பாராமுகமான வஞ்சகப் போக்கிற்கு எதிராகவும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் (பந்த்) போராட்டம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைக்காக குரல் கொடுத்து உடன் நின்ற பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பி னருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

இதே பிரச்சினையில் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அதனை பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று ஆதரித் துள்ளன. தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட குரலுக்கு மதிப்பளித்து  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படியும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கருநாடக அரசு திறந்து விட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு மீண்டும் வலியுறுத் துகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *