தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

1 Min Read

சென்னை,ஜன.29- மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கரபாண்டியன் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியராகவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சிய ராகவும், உயர்கல்வித்துறை துணை செயலாளர் கே.தர்பகராஜ் திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு மின்னணு கழகத்தின் செயல் இயக்குநர் எஸ்.அருண்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சிய ராகவும், வணிக வரித்துறை இணை ஆணையர் (நிர்வாகம்) வி.ஆர்.சுப்பு லட்சுமி வேலூர் மாவட்ட ஆட்சிய ராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.குமர வேல்பாண்டியன் தோட் டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியர் டி.ரவிச்சந்திரன் உயர்கல்வித்துறை துணை செயலாள ராகவும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநராக எம்.லட்சுமி, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை ஆணையராக ஜி. பிரகாஷ், வருவாய் நிர்வாகத்துறை (நிர்வாகம்) கூடுதல் ஆணையராக எஸ்.நடராஜன் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *