பொதுமக்கள் முகாம் மீது மியான்மர் ராணுவம் குண்டு வீச்சு 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாப பலி

Viduthalai
1 Min Read

அரசியல்

பாங்காக், அக். 12- மியான்மர் நாட்டில் பொதுமக்கள் முகாம் மீது அந்நாட்டு ராணுவம் குண்டு வீசி தாக்கியதில் 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியானார்கள். 

மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ர வரியில் நடந்த தேர்தலில் ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறிய ராணுவம் ஆட்சிப் பொறுப்பை கைப்பற் றியது. ராணுவ ஆட்சியை எதிர்த்த பொதுமக்கள் கண்மூடித்தனமாக தாக் கப்பட்டனர். 

ராணுவத்துக்கு எதி ராக ஜனநாயக மக்கள் படை என்ற ஆயுத மேந்திய குழுவும், கச்சின் பகுதி சிறுபான்மை இன மக்களும் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின் றனர்.

இந்த நிலையில், ராணுவத்துக்கு பயந்து வீடுகளை விட்டு, இடம் பெயர்ந்த பொதுமக்கள் மியான்மரின் லைசா நக ருக்கு அருகில் முங்லை ஹையெட் பகுதியில் உள்ள கூடாரத்தில் தங்கியிருந்தனர். 

9.10.2023 அன்று இரவு 11 மணியளவில் திடீரென அங்கு வந்த ராணுவ ஜெட் விமானம் கூடாரத்தின் மீது குண்டு வீசியது. அதில் கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 13 குழந்தை கள் உள்பட 19 பேர் பரிதாப மாக பலியாயினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *