மறைவு

1 Min Read

சிதம்பரம் நகர மேனாள் நகர்மன்ற உறுப்பினரும், 1957ஆம் ஆண்டு கழகம் நடத்திய சட்ட எரிப்புப் போராட் டத்தில் 9 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றவரும், தேசப் பட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் உடைப்புப் போராட்டம் ஆகியவற்றில் சிறை சென்றவருமான – பெரியார் பெருந்தொண்டர் வி.நமசிவாயம் (வயது 96) நேற்று (26.1.2024) மதியம் மறைவுற்றார். அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று (27.1.2024) மாலை 3 மணிக்கு சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள ஞானபிரகாசம் குளக்கரை கீழவீதியிலிருந்து புறப்பட்டது. அவருக்கு பேபி என்ற மனைவியும், காமராஜ், குமார், ஆனந்தன், கண்ணன் என்ற மகன்களும், தேவி என்ற மகளும் உள்ளனர்.

– – – – –

நெல்லுப்பட்டு கிளைக் கழகச் செயலாளர் ம.இராவணனின் தாயார் ஜீவரத்தினம் இன்று (27.1.2024) அதிகாலை மறைவுற்றார். இறுதி ஊர்வலம் இன்று மதியம் 3 மணியளவில் நெல்லுப்பட்டு அன் னாரது இல்லத்திலிருந்து புறப்படும். கழகப் பொறுப்பாளர்கள், தோழர் கள் மாலை வைத்து இறுதி மரி யாதை செலுத்தினர்.
தொடர்புக்கு: ம.இராவணன் 9751720941.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *