இணையவழி விளையாட்டு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் யார்?

1 Min Read

தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு

சென்னை,அக்.13- தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைத்து தலைவர், உறுப்பினர்களை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு 11.10.2023 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்தினை தடுக்கும் வகையில், தலைவர், உறுப்பினர்கள் உள்ளடக்கிய தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் ஒன்றினை அமைத்து 18.8.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது:

1. முகமது நசிமுதீன் (அய்ஏஎஸ் ஓய்வு) – தலைவர்

2. எம்.சி.சாரங்கன் (அய்பிஎஸ் ஓய்வு) – உறுப்பினர்

3. சி.செல்லப்பன், பேராசிரியர் (ஓய்வு), பொறியியல் கல்லூரி, கிண்டி – உறுப்பினர்

4. ஓ.ரவீந்திரன், உளவியல் மருத்துவர் (ஓய்வு), ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, போரூர் – உறுப்பினர்

5. விஜய் கருணாகரன், நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர், இன்கேஜ் குழு – உறுப்பினர் இந்த ஆணையமானது, 15.9.2023 அன்று முதல், ‘‘தமிழ்நாடு இணையவழி விளை யாட்டு ஆணையம் முதல் மாடி, நகர்ப்புற நிர்வாக கட்டடம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர்,ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28’’ என்ற முகவரியில் செயல்பட துவங்கி யுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *