கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

26.1.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ இந்தியா கூட்டணியின் எதிர்காலம் காங்கிரசின் அணுகுமுறையில் உள்ளது என்கிறது தலையங்க செய்தி.
♦ ‘‘பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி வருகின்றது. நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால் நடைப்பயணத்தில் நீதி என்ற வார்த்தை இணைக்கப்பட்டுள்ளது. நாடு முழு வதும் அநீதிக்கு எதிராக இந்தியா கூட்டணி போராடும்” என்றார் ராகுல். ராகுல்காந்தி தலைமையிலான நீதி நடைப் பயணம் நேற்று மேற்கு வங்கத்தின் கூச் பீகார் மாவட்டத்தை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து நடைப்பயணத்துக்கு இரண்டு நாள் ஓய்வு விடப்பட்டு ராகுல்காந்தி சிறப்பு விமானம் மூலமாக டில்லி புறப்பட்டு சென்றார். 28ஆம் தேதி நடைப்பயணம் மீண்டும் தொடங்குகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மக்களவைத் தேர்தலுக்கு காகித வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யலாமா வேண்டாமா என்ற விவாதத்திற்கு நேரம் முடிந்துவிட்டது என்கிறார் காங்கிரஸ் கட்சியின் அயலகத் தலைவர் சாம் பிட்ரோடா.
♦ ராமாயணக் கதைகள் குறித்த கருத்துகள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை. விதித்துள்ளது, “இது ஒரு விளக்கம். எளிய மற்றும் எளிமையானது” மற்றும் “இது எப்படி குற்றமாகும்?” என நீதிபதி மேத்தா கருத்து. மவுரியாவின் கருத்துகளைத் தொடர்ந்து புனித நூலின் பிரதிகள் எரிக்கப்பட்டதாக அரசு சுட்டிக்காட்டிய போதிலும், நீதிபதி மேத்தா, “அதற்கு அவர் பொறுப்பேற்க முடியாது. இது ஒரு சிந்தனை வரி.” என பதிலடி.
♦ பாரத ரத்னா கர்ப்பூரி தாக்குருக்கு அளிக்கப்பட்ட உரிய கவுரவம். ஆனால் மோடி அரசாங்கம் தாக்கூரின் கொள்கையைப் பின்பற்றி, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டை அறிமுகப் படுத்துமா? இது ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இன்னும் அவசியமாக்கும் சீர்திருத்தம்? என பேராசிரியர் கிறிஸ்டபி ஜாப்ரலெட் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தி டெலிகிராப்:
♦ கடவுள்களின் படத்தை காண்பிப்பதனால் ஏழைகளின் வயிற்றை நிரப்ப முடியாது. நாட்டில் பணவீக்கம் தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் பலர் வேலை இல்லாமல் உள்ளனர். நெருக்கடிகள் ஏற்படும் போது பாகிஸ்தான்,சீனா மற்றும் கடவுள்களின் பெயர்கள் உள்பட பல சாக்குபோக்குகளை மோடி சொல்வார். இதற்கு முன் பல உத்தரவாதங்களை அளித்துள்ள மோடி இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே மோடியின் வலையில் யாரும் விழுந்து விடாதீர்கள்’’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூனா கார்கே எச்சரிக்கை.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *