சென்னையில் உதவி ஆணையர்கள் 12 பேர் பணியிடமாற்றம்

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.15- சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 12 உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 

காத்திருப்போர் பட்டியலில் இருந்து கண்காணிப்பாளர் கலியன் சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு உதவி கண் காணிப்பாளராகவும், மடிப்பாக்கம் உதவி ஆணையராக இருந்த பிராங்க் டி.ரூபன் ஆவடி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும், நீலாங்கரை உதவி ஆணையராகவும் இருந்த சுதர்சன் தி.நகர் உதவி ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த ராஜா வேப்பேரி உதவி ஆணைய ராகவும், வேப்பேரி உதவி ஆணையராகவும் இருந்த கண்ணன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆவடி மாநகர மணலி உதவி ஆணையராக இருந்த தட்சிணா மூர்த்தி சென்னை மாநகர பூக்கடை உதவி ஆணையராகவும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் கண்காணிப் பாளராக இருந்த சரண்யா சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவும், கோவை பொருளாதார குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் சென்னை மாநகர கோயம்பேடு உதவி ஆணையராகவும், பூக்கடை உதவி ஆணையராக இருந்த பால கிருஷ்ணபிரபு சென்னை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும், செங்கல்பட்டு கண்காணிப்பாள ராக இருந்த பாரதி சென்னை மாநகர நீலாங்கரை உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த புருஷோத்தமன் மடிப்பாக்கம் உதவி ஆணையராகவும், சிபிசிஅய்டி கண்காணிப்பாளராக இருந்த ரமேஷ் அரும்பாக்கம் உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *