கிரீமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும்
சென்னை, ஜன. 19- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா, மாபெரும் விழாவாக, எழுச்சியான விழாவாக சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் சனவரி 7, 2024 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
விழா துவங்கும் முன், தந்தை பெரியார் நினைவிடத்திற்கு உறுப் பினர்கள் சென்று மரியாதை செலுத்தினர். விழா தொடக்கம், மெல்லிசைப் பாடல்கள் கிளாரினெட் இசைக் கருவியின் மூலம் சிறப்பாக தொடங்கியது.
பின்னர் மேடையில் அமைக் கப்பட்ட தந்தை பெரியாரின் படத் தைத் திறந்து வைத்து விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
யூனியன் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சத்ய பான் பெஹரா தொடக்கவுரை யாற்றினார்.
வங்கியின் உயர் அதிகாரிகள் எஸ்.சுப்ரமணியன், சி.பிரபு, ரஞ்சித் சுவாமிநாதன், வி.ரவிக்குமார், மற்றும் அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி அமைப்பின் செயல் தலைவர் முனைவர் அமிர்தான்சு, ஆலோசகர் டாக்டர்.அமிர் தன்ஷு, செயல் தலைவர், எங்கள் அகில இந்திய அமைப்பின் ஆலோசகர் ரவீந்திர ராம், வங்கி பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அ.சிதம்பரம், தெலங்கானா யூனியன் வங்கி ஓபிசி சங்கத்தின் தலைவர் சுந்தர் ராவ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் குறித்த அரசு ஆணைகள் அடங்கிய நினைவுப் பரிசை தலைவர்கள் வெளியிட்ட னர் மற்றும் முதல் நினைவுப் பரிசை ஓபிசியின் குரல் (ஹிந்தி) இதழின் வெளியீட்டாளர் ராணி அமிர்தான்சு பெற்றுக் கொண் டார்.
விழாவில் சங்கத்தின் நிறுவன தலைவர்கள் ஆர்.ராஜூ, எஸ்.சேக ரன், எம்.ஆனந்தன், கே.லோகநா தன், ஜி.நீலமேகம், கோ.கருணாநிதி ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
பொதுச் செயலர் எஸ்.நட ராஜன் வரவேற்றுப் பேசினார். கோ.கருணாநிதி தலைமை உரை நிகழ்த்தினார். துணைப் பொதுச் செயலாளர் எம்.பாக்யராஜ் நன்றி கூறினார்.
பொருளாளர் ஜி.சரஸ்வதி நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார்.
ஆந்திரா, டில்லி, குஜராத், மகாராட்டிரா, ஒடிசா, ராஜஸ் தான், தெலங்கானா, உத்திரப்பிர தேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து யூனியன் வங்கி ஓபிசி அமைப்பின் தலை வர்கள் மற்றும் அகில இந்திய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் தலைவர்கள் (அய்.சி.எப்., அய்.ஓ.பி., அய்.அய்.டி., சென்சஸ், ஹெச்.வி.எப். ஆவடி) விழாவில் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.
பலத்த மழையையும் பொருட் படுத்தாமல், நல சங்கத்தின் உறுப்பினர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில், 1. வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
2. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
3. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக அரசமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம்.
4. தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கிட உரிய சட்டம்.
5. ஒன்றிய பணியாளர் நலத் துறையின் 6.10.2017 தேதியிட்ட ஆணை, வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற் றும் பிற்படுத்தப்பட்டோர் நல னுக்கு எதிராக உள்ளதால், அந்த ஆணையை ஒன்றிய அரசு திரும் பப்பெறவேண்டும்.
6. கிரீமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும். அந்த ஆணை வெளியிடும் வரை, தற்போது வழங்கப்படும் ஓபிசி சான்றிதழ் ஓராண்டு வரைதான் செல்லும் என்பதற்குப் பதிலாக, மூன்றாண்டுகளுக்கு செல்லுபடி யாகும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
7. மண்டல் குழு பரிந்துரையின்படி உச்ச நீதிமன்ற, உயர் நீதி மன்றம் நீதிபதிகள் நியமனத்திலும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவின ருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.