புதுக்கோட்டை, ஜன.19 புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் நேற்று (18.1.2024) நடைபெற்ற ஜல்லிக்கட்டைப் பார்வையிட வந்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டை மான், செய்தியாளர்களிடம் கூறியது: ஆழ்கடல் மீன்பிடிப்பில் எல்லை என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. தமிழ்நாடு மீனவர்களும் கைதுசெய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்களும் இங்கே கைது செய்யப்படு கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் அவ்வப்போது மீனவர்கள் விடுதலையும் செய்யப்படுகிறார்கள். எனவே, மீனவர்கள் பிரச்சினையில் சுமூகத் தீர்வு காண்பதற்கு, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்கள் பிரச்சினை தமிழ்நாடு – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு – பேச்சுவார்த்தை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books