ஆரம்பமாகிவிட்டது ராமன் கோவில் பெயரில் பலே மோசடி!

2 Min Read

ஆன்லைனில் லட்டு விற்கும் அல்வா கும்பல்

புதுடில்லி, ஜன.19- ‘அயோத்தி ராமன் கோவில் லட்டு’ என்ற பெயரில், ‘அமேசான்’ விற்பனை தளம் வாயிலாக லட்டு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல்கள் குறித்து கோவில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கு வரும் 22 ஆம் தேதி நடக்க உள்ளது. நாடு முழுவதும் இதை பற்றிய பேச்சு அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சில கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.
‘அயோத்தி ராமன் கோவில் லட்டு’ என்ற பெயரில், பிரபல ஆன்லைன் விற்பனை தளமான, ‘அமேசான்’ வாயிலாக சிலர் லட்டுகளை விற்று வருகின்றனர்.
தனியார் நிறுவனம் ஒன்று 250 கிராம் லட்டுகளை, ராமன் கோவில் பிரசாதம் என குறிப்பிட்டு, தள்ளுபடி போக 350 ரூபாய்க்கு விற்கிறது.
மற்றொரு நிறுவனம் அயோத்தி ராம ஜென்ம பூமியின் ரகுபதி லட்டு பிரசாதம் என குறிப்பிட்டு, ஒரு கிலோ லட்டுகளை 799 ரூபாய்க்கு விற்பனை செய் கிறது.
அதே போல் காதி ஆர்கானிக் என்ற தனியார் நிறு வனம், இலவச ராமன் கோவில் பிரசாதம் என தங்களது இணையதளத்தில் விளம்பரப்படுத்தி உள்ளது.

இதை அறிந்து ஏராளமானோர் அந்த இணைய தளத்துக்கு சென்று இலவச பிரசாதத்திற்கு விண்ணப் பித்தனர். அந்த தகவலை பெற்று, தங்கள் தயாரிப்பு களை அவர்களிடம் விற்க முயன்றுள்ளனர்.
இது பற்றி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது:
ராமன் கோவில் திறப்பு விழாவை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் பணம் பறிக்க முயற்சிகள் நடக் கின்றன. ராமன் கோவில் பெயரில் நன்கொடை திரட்ட முயன்றவர்கள், குடமுழுக்கிற்கு போலி வி.அய்.பி., அனுமதி அட்டையை வழங்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்நிலையில் ‘ராமன் கோவில் பிரசாதம்’ என்ற பெயரில் மோசடியில் இறங்கியுள்ளனர். இந்த நிறு வனங்களுக்கும், ராமன் கோவில் அறக்கட்டளைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இது பற்றி எங்களது வழக்குரைஞர் குழு காவல் துறையில் புகார் அளிக்க உள்ளது.
-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *