பொங்கல் – பெயர்க்காரணம்

viduthalai
0 Min Read

பூமியிலே நாற்று வைத்து
கோடி நெல்லைக் கொய்வதுவாம்
சூரியனின் கீற்றுகள்
பச்சையமாய்த் தங்குவதாம்
சேறு மிதித்த உழவனுக்கு – தையில்
செல்வத்தை வழங்குவதாம்!

மாற்ற முடியாத் துன்பத்தை – திமில்
ஏ(வீ)று கொண்டு நீக்குவதாம்
பழைமையினை துறந்துவிட்டு – மனம்
பக்குவமாய் வளருவதாம்
இனிமையான வாழ்வதனை
இனிமேலே காணுவதாம்!

மக்கள் மனம் மகிழ்ச்சி பொங்க – பூமியில்
மழை நீராய் சேருவதாம்
இத்தனைதான் என்றில்லை
எல்லோரும் ஓரினம்தான் –
திராவிடம்தான் என்றே
பொங்குவது – ஆம்!
பொங்கலோ பொங்கல் – என்று
பொங்குவதாம்!

– கே.பாண்டுரங்கன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *