ராமன் கோவில் அறக்கட்டளை – வி.எச்.பி. இடையே மோதல்!

1 Min Read

லக்னோ, ஜன.12 உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் கார்ப்பரேட் தொழிலதிபர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. ஆனால் மேனாள் துணைப் பிரதமரும், மூத்த பாஜக தலைவ ருமான அத்வானியை ராமர் கோவில் விழாவுக்கு வர வேண்டாம் என்று ராம ஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டு கோள் விடுத்திருந்தது. வயது மூப்பு கார ணமாகவே அத்வானி ராமர் கோவி லுக்கு வர வேண்டாம் எனக் கூறியதாக அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவில் அத்வானி கண்டிப்பாக கலந்து கொள்வார் என விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அயோத்தியில் விஎச்பி – ராமஜென்ம பூமி அறக்கட்டளை இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *