செய்திச் சுருக்கம்

viduthalai
1 Min Read

கொள்முதல்
உலக முதலீட்டாளர் மாநாட்டில், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார் பில் பன்னாட்டு வாங்குவோர் – விற்போர் சந்திப்பு நிகழ்வு அமைச்சர் தா.மோ.அன்பர சன் தலைமையில் நடை பெற்றதில் 174 நிறுனங்களிடம் இருந்து ரூ.42.11 கோடிக்கு கொள்முதல்கள் செய்யப் பட்டுள்ளன.

ஒப்பந்தம்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன. டாடா, அதானி குழு மம் அதிக அளவில் தமிழ் நாட்டில் முதலீடு செய்கிறது.

சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தகவல்.

பணிக்கு…
உதவி சிறை அலுவலர் கள் பணியிடங்களுக்கு 18ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தமிழ்
நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளர் ச. கோபாலசுந்தரராஜ் அறிவிப்பு.

பரிசீலிக்க...
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங் கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக் கில் வரவு வைப்பது தொடர் பாக அரசு பரிசீலிக்க வேண் டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *