சென்னை,ஜன.9– தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு 2022 மே 21ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கிடையே, குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுக்காக முதலில் வெளியிட்ட அறிவிப்பாணையில் 5,413 இடங் கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டது.
கடந்த வாரம் வெளியான அறிவிப்பில் 5,777 பணியிடங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், காலியிடங்களின் விவரங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரப் பூர்வமாக நேற்று முன்தினம் (7.1.2024) வெளியிட்டது.
அதில் குரூப்-2 பதவிகளில் 161, 2ஏ பதவிகளில் 5,990 என மொத்தம் 6,151 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்கள் 6,151- ஆக அதிகரிப்பு
Leave a Comment