வழக்குரைஞர் – சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய “குடியரசுத் தலைவர் – ஆளுநர் அதிகாரங்கள் – அரசமைப்புச்சட்ட நிர்ணய அவை விவாதங்கள்”நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை
சென்னை,அக்.19- வழக்குரைஞர் – சிகரம் ச. செந்தில் நாதன் எழுதிய குடியரசுத தலைவர்-ஆளுநர் அதிகாரங்கள் – அரசமைப்புச்சட்ட நிர்ணய அவை விவாதங்கள்…” நூல் வெளியீட்டு விழா நேற்று (18.10.2023) மாலை சென்னை உயர்நீதிமன்றம் அருகில் உள்ள பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்றது.
வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு வரவேற்புரையாற்றினார். வழக்குரைஞர் எஸ்.ரவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நீதிபதி எஸ்.சக்திகுமார் நூலை வெளியிட முதல் பிரதியை மூத்த வழக்குரைஞர் எஸ்.ரவீந்திரன் பெற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நிறைவாக நூலாசிரியர் வழக்குரைஞர் சிகரம் ச. செந்தில்நாதன் ஏற்புரையாற்றினார்.
விழாவில் காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், புலவர் பா.வீரமணி, விழிகள் வேணுகோபால், திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன், கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வழக்குரைஞர்கள் சு.குமாரதேவன், ஜெ.துரைசாமி, ஆ.வீரமர்த்தினி, தளபதிபாண்டியன், துரைஅருண், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் ஆதில், அறிவேந்தி, உதய் பிரகாஷ், ஆவடி ரவீந்திரன், அரும்பாக்கம் சா. தாமோதரன், சோ.சுரேஷ், க.கலைமணி உள்பட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.