என்ன செய்கிறது ஒன்றிய அரசு?

Viduthalai
2 Min Read

தமிழ்நாடு மீனவர்களை தாக்கி  மீன்பிடி கருவிகள் பறிப்பு : கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்!

வேதாரண்யம், அக 19 கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, முருகேசன், மகாலிங்கம், ராஜகோபால் உள்ளிட்ட 5 பேரும்  நேற்று முன்தினம் காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், சண்முகவேல், முரு கானந்தம், செல்வம் ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க சென்றனர். மொத்தம் 2 பைபர் படகு களில் சென்ற 9 மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டு இருந் தனர். அப்போது அங்கு 2 விசைப்படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், சுப்பிரமணியன் படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலை மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை கேட்டுள்ளனர். ஆனால் மீனவர்கள் அதனை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாங்கள் வைத்து இருந்த இரும்பு கம்பியால் 5 மீனவர்களையும் சராமாரியாக தாக்கினர். 

பின்னர் 600 கிலோ மீன்பிடி வலையை எடுத்துக்கொண்டு, படகையும் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஏறி அதில் இருந்த மீனவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி, படகில் இருந்த 4 மீனவர்களை யும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு படகில் இருந்த மீன்கள், தொழில் நுட்ப கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச்சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சமாகும். 

 காலை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 9 மீனவர்களும் விழுந்தமாவடி கடற்கரைக்கு வந்தனர். தொடர்ந்து கீழையூர் கடலோர காவல் படையில் மீனவர்கள் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து மீனவர்கள் கூறுகையில், தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்துச்செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது ஒன்றிய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *