மறைவுற்ற மேல் மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, திண்டிவனம் கழக மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் செ. பரந்தாமன், மாவட்ட அமைப்பாளர் வில்லவன் கோதை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நவா. ஏழுமலை, மாவட்ட இளைஞரணித் தலைவர் கே. பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு. இரமேஷ், நகர கழக செயலாளர் சு. பன்னீர்செல்வம் ஆகிய கழகப் பொறுப்பாளர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பங்காரு அடிகளார் மறைவுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி அடிகளாரின் மூத்த மகன் கோ. ப. அன்பழகனிடம் வழங்கினார். உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுந்தர் ஆகியோரிடமும் தமிழர் தலைவர் விடுத்த இரங்கல் அறிக்கை வழங்கப்பட்டது. (20.10.2023)
மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books