“பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” பா.ஜ.க. முதலமைச்சரின் சர்ச்சை பதிவு – குவியும் கண்டனம்!

2 Min Read

அசாம், டிச.30 பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்தி ரர்கள் கடமை என்று பாஜக ஆளும் மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவுக்கு தற் போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் தீண்டாமை, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பல நிகழ்வுகள் அரங்கேறி வரு கின்றன. இந்தியா முன்னோக்கி செல்கிறது என்று பாஜக அரசு வெளியே சொல்லிக் கொண்டாலும், அவரவர் வீடுகளிலும், ஆளும் மாநிலங்களிலும் பின்னோக் கியே செல்கிறது. படிப்பறிவு, மருத்துவ வசதி என பல விஷயங்களில் விட இந்தியாவில் பல மாநி லங்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை.
இதனிடையே ஒன்றியத்தில் பாஜக அரசு ஆட் சிக்கு வந்த பிறகு மதம், ஜாதி உள்ளிட்டவையை தூண்டிவிட்டு மக்கள் மத்தியில் மோதலை உண்டாக்கி வருகிறது. குஜராத் கலவரம் முதல் மணிப்பூர் வன்முறை வரை பாஜகவின் பின்புலமே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. மேலும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சிஏஏ உள்ளிட்ட பல சட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்த துடிக்கும் பாஜக அரசு, ஜாதிய ரீதியான பிளவையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. அதோடு இந்த சூழலில் தற்போது அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார். இதையடுத்து சில மணி நேரத்திலேயே அந்த பதிவையும் நீக்கியுள்ளார்.
இதுகுறித்து 26.12.2023 அன்று அவர் வெளியிட்ட வலைதள பதி வில், “பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் கடமை” என்று பகவத் கீதை வாயிலாக கிருஷ்ணர் கூறுவது போல் காட்சிப் பதிவும் இடம் பெற்றிருந்தது. இந்த பதிவுக்கு கண் டனங்கள் குவிந்து வந்தது.
மேலும் சிபிஅய்(எம்), “பாஜகவின் மனுவாதி சித்தாந்தம் புறப்படுகிறது” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், தனது பதிவை நீக்கினார். எனினும், அவர் வெளியிட்டுள்ள பதிவின் நகல் இணையத்தில் வைரலாகி கண்டனங்கள் குவிந்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *