புதுடில்லி அக்.20 ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், காங் கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரியங்கா காந்தி ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
2024ஆம் ஆண்டு நடை பெற உள்ள மக்களவை தேர் தலுக்கு முன்பாக நடப்பாண்டு இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ் தான், தெலங்கானா என அய்ந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் அறிவிக் கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் நவம்பர் 25-ஆம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காங்கிரஸ், பாஜக உள்பட மாநில கட்சிகள் தீவிர தேர்தல் பிர சாரங்களில் ஈடுபட்டு வரு கின்றன. கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர் களுக்காக தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் வேட் பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கெனவே,, மிசோரம், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற் கொண்ட நிலையில், ராஜஸ் தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசா மாவட்டத்தில் இன்று நடைபெறும் காங் கிரஸ் தேர்தல் பேரணியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.