தமிழ்நாடு அரசை தேவையற்ற முறையில் ஆளுநர் தமிழிசை விமர்சிப்பதா? தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் பதிலடி

viduthalai
2 Min Read

ஆறுமுகநேரி, டிச. 27- வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் தேவையான நிதியை ஒன்றிய அர சிடம் இருந்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாங்கி தருவார் என நம்புகிறோம்.
போதுமான நிதியைப் பெற்றுத் தந்தால் மகிழ்ச்சியடைவோம் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் உருவான வளி மண்டல சுழற்சி காரணமாக டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங் களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பெய்தது.
இந்த அதி கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடு களுக்குள்ளும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.
இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து பல்வேறு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டன.
இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நேற்று (டிச.26) நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன.
இதில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங் கினார். இதனையடுத்து செய்தியா ளர்களைச் சந்தித்த அவர், “தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சாரம், செல்போன் டவர்கள் சீர மைக்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இதெல்லாம் வழங் கப்பட்டுள்ளதா? சிறீ வைகுண்டத் தில் ரயில் தண்டவாளங்கள் 8 கி.மீ தூரம் தான் சேதமடைந்துள்ளது.
அதை ஒன்றிய அரசு ஏன் இன் னும் சீரமைக்கவில்லை. முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஒன்றிய அரசு உணவு கிடங்கிலிருந்த உண வுப் பொருட்களை ஏன்?
பாதுகாக்கவில்லை என ஆளு நர் தமிழிசைக்கு கேள்வி எழுப் பினார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (டிச.26) வருகை தந்துள்ளார்.
அவரின் வருகையை வரவேற் கிறோம். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் தேவையான நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து வாங்கி தருவார் என நம்புகிறோம். போதுமான நிதியைப் பெற்றுத் தந்தால் மகிழ்ச்சியடைவோம்.
தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தைத் தான் கேட்கிறோம். குஜராத்திற்குக் கொடுத்தது போலத் தமிழ்நாட்டிற்கும் நிதி தர வேண்டும்” என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *